ரசிகர்களுக்கு இது தேவையில்லாத விஷயம்..பரபரப்பாக பேசிய கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் லாரன்ஸ் - எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது.

இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதுவரை இப்படம் 45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேவையில்லாத விஷயம்
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்திக் சுப்புராஜ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், "படத்தில் எவ்ளோ திரையரங்கில் வெளியிடுகிறார்கள் அந்த படம் எவ்ளோ வசூல் செய்தது, தயாரிப்பாளருக்கு எவ்ளோ லாபம் கிடைத்தது என்ற விஷயம் ரசிகர்களுக்கு இயக்குனர்களுக்கு தேவையில்லாத ஒன்று".
"நல்ல சினிமா ஆரோக்கியமான சினிமா என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்" என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu