பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறேனா?- முதன்முறையாக கூறிய கதிர்
விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து தான் நிறைய பேச்சுகள் வந்துகொண்டிருக்கின்றன.
அதிகமாக மக்கள் இந்த சீரியல் பற்றி பேச ஆரம்பித்தது சித்ராவின் மறைவிற்கு பிறகுதான். அதன்பிறது சீரியலில் அவருடைய வேடத்திற்கு காவ்யா வர அவரை பற்றியும் மக்கள் பேசி வந்தார்கள்.
அதன்பிறகு தனம் கர்ப்பமாக இருப்பது, மெகா சங்கமம் நடந்தது என நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் சீரியலில் நடந்தது.
இதற்கு நடுவில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து கதிர் என்கிற குமரன் விலகுவதாக சில வதந்திகள் வர ஆரம்பித்தன, காரணம் அவர் சீரியல் குறித்து போட்ட ஒரு பதிவு தான்.
ஆனால் நடந்தது என்னவென்றால், விஜய் டிவி விருதில் தனக்கு விருது கிடைக்கவில்லை என சிலர் கூறியதாகவும், தான் கொடுத்த வேலையை செய்கிறேன் விருது கிடைப்பதை பற்றி யோசிக்க வேண்டாம் என நான் போட்ட பதிவுகள் தவறாக புரிந்துகொண்டதால் இப்படி ஒரு வதந்தி பரவி விட்டது என தெரிவித்திருக்கிறார்.
எனக்காக எல்லாவற்றையையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக.. - மலேசியாவில் விஜய் உருக்கம் IBC Tamilnadu