நின்றுபோன காவேரியின் திருமணம்.. மகிழ்ச்சியில் விஜய்.. மகாநதி சீரியல் புரோமோ
மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இதில் காவேரி தனது நினைவுகளை இழந்து புதிய வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், அவள் இறந்துவிட்டதாக என விஜய்யிடம் கூறிவிட்டனர்.

இதனால் மனைவி இறந்த நிலையில், தனது மகளை தனியாக வளர்த்து வந்தார் விஜய். இந்த சமயத்தில் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் காவேரியை விஜய் பார்க்க, தனது மனைவி இறக்கவில்லை என மகிழ்ச்சியடைந்தார். இதனால் மீண்டும் முதலில் இருந்து காவேரியை காதலிக்க தொடங்கினார்.

காவேரியும் விஜய்யுடன் மீண்டும் ஒன்று சேரவேண்டும் என குடும்பத்தில் உள்ளவர்கள் நினைத்தாலும், காவேரிக்கு இதில் உடன்பாடு இல்லை. இதனால் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள காவேரி முடிவு செய்தார்.
நின்றுபோன திருமணம்
இந்த நிலையில், அந்த திருமணம் தற்போது நின்றுபோய் விட்டது. மாப்பிள்ளை வீட்டிற்கு காவேரியின் அம்மா சென்று, "தனது மகளுக்கு விபத்து ஏற்பட்ட பின் திடீரென கத்துவாள், மாமியாருக்கு அடங்கி போகிற மருமகளாக இருக்க மாட்டாள்" என சொல்ல, அந்த மாப்பிள்ளை இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்.

இதனால் காவேரி திருமணம் நின்றுவிட்டது. இதை அறிந்து விஜய் செம மகிழ்ச்சியில் உள்ளார். அப்போது கூட, "தன்னை மிகவும் நேசிக்கும் ஒருவரைதான் திருமணம் செய்துகொள்வேன்" என காவேரி கூறுகிறார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
பள்ளிக்கல்வித் துறை ஊழியர்களுக்கு 10 மணிக்கு முன் வர உத்தரவு - மீறினால் சட்ட நடவடிக்கை IBC Tamilnadu