கயல் மாமியாரை தூண்டிவிட்ட வடிவு.. அவர் போட்ட மோசமான பிளான்! கயல் சீரியலில் இன்று
சன் டிவியின் கயல் சீரியலில் தற்போது கயல் மற்றும் எழில் இருவரும் வீட்டை விட்டு வந்துவிட்ட நிலையில், தனது மகன் தன்னை விட்டு சென்றுவிட்டதை நினைத்து தொடர்ந்து வருத்தத்தில் இருக்கிறார் எழிலின் அம்மா சிவசங்கரி.
அதை எப்படியாவது பயன்படுத்தி கயலை பழிவாங்க வேண்டும் என அவரது வில்லி பெரியம்மா வடிவு ஒரு திட்டம் போடுகிறார். கயல், எழில் இருவரும் அவர்கள் வீட்டில் சந்தோசமாக பொங்கல் கொண்டாடிய ஸ்டில்களை அவர் சிவசங்கரிக்கு அனுப்பி ஒரு விஷயத்தை போன் செய்து கூறுகிறார்.
இந்த போடோக்களை என் மாமியாருக்கு அனுப்புங்க, அவர் பார்த்து தூக்கில் தொங்கட்டும் என கயல் எண்னிடம் சொன்னாள் என வடிவு போன் செய்து பொய் சொல்கிறார்.
மேலும் கயல் ஒரு வீட்டுக்கு வயதான பெண் ஒருவரை பார்க்க செல்கிறார். படுத்த படுக்கையாக இருக்கும் மாமியாரை பற்றி மருமகள் மிக மோசமாக பேசுவதை கேட்டு கயல் அவருக்கு அட்வைஸ் கூறுவது இன்றைய எபிசோடுல காட்டப்படுகிறது.
சிவசங்கரி மோசமான பிளான்
அதன் பின் சிவசங்கரி கயல் வேலை செய்யும் ஹாஸ்பிடல் டாக்டர் கௌதமை வர வைத்து ஒரு மோசமான திட்டத்தை போடுகிறார்.
கயல் மானத்தை வாங்க வேண்டும். அப்போது தான் எழில் கயலை விட்டுவிட்டு என்னிடம் வந்து சேர்வான் என அவர்கள் இருவரும் திட்டம் போடுகிறார். கயல் மானத்தை வாங்க அவர்கள் போட்ட மோசமான பிளான் என்ன என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
