பிரபல விளையாட்டு வீரர் குறித்து உருக்கமாக பதிவு செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. வருத்தத்தில் ரசிகர்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இவர், மலையாள நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்து, தயாராகியுள்ள மரைக்காயர் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
மேலும் தமிழில், ரஜினிகாந்துடன் அண்ணாத்த, இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரபல கால்பந்து வீரரான மெசி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆம், நேற்று தான் கால்பந்து வீரர் மெசி சர்வதேச கால்பந்து ஆட்டத்தில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெற்றார்.
இவருடைய ரசிகையான, நடிகை கீர்த்தி சுரேஷ், மெசின் ஓய்வு குறித்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ பதிவு..