அபார்ட்மெண்டில் பிணமாக கிடந்த 26 வயது நடிகை! தொடரும் நடிகைகள் மரணம்
சினிமா துறையை சேர்ந்த நடிகைகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மரணம் அடைவது பற்றிய செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கேரளாவில் நடிகை சஹனா என்பவர் வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு கொண்டார். அவரது கணவர் கொடுமை தான் காரணம் என தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து பெங்களூரில் சேத்தனா ராஜ் என்ற ஒரு நடிகை உடல் கொழுப்பு குறைய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் சில மணி நேரத்தில் பலியானார். அவரது மரணத்திற்கு medical negligence தான் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் ஒரு நடிகை மரணம் என செய்தி வந்திருக்கிறது. 26 வயதான ஷெரின் செலின் மேத்யூ என்ற அந்த நடிகை வீட்டில் ஃபேனில் தூக்கிட்ட நிலையில் பிணமாக இருந்திருக்கிறார்.

Chakkaraparambu பகுதியில் இருக்கும் அபார்ட்மெண்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரது ரூம்மேட்ஸ் தான் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை முதலில் பார்த்திருக்கின்றனர். போலீஸ் அவரது மரணத்திற்கான காரணத்தை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan