தளபதி விஜய் குறித்து கே.ஜி.எப் இயக்குனர் கூறிய வார்த்தை - எதிர்பார்க்கும் ரசிகர்கள்
கன்னடத்தில் உருவாகி, மற்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எப்.
இதன் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்று தான் தற்போது இந்திய திரையுலகமே காத்துகொண்டு இருக்கிறது.
சமீபத்தில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, சாதனை படைத்தது.
இவ்வளவு பெரிய பிரமாண்ட படைப்பை உருவாகியுள்ளவர் தான், இயக்குனர் பிரஷாந்த் நீல். இவர் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் பிரபாஸை வைத்து சலார் எனும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் குறித்து ரசிகர்கள் ஒருவர் இயக்குனர் பிரஷாந்த் நீல் இடம் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த இயக்குனர் பிரஷாந்த் நீல், " பவர் ஹவுஸ் ' என செம மாஸாக கூறியுள்ளார். இதனால் இவ்விருவரும் இணைந்து படம் பன்னுவார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.