ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான... டாக்சிக் படம் குறித்து பேசிய நடிகை கியாரா அத்வானி
டாக்சிக்
கே.ஜி.எப் 2 வெற்றிக்கு பின் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டாக்சிக். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி மற்றும் தாரா என இந்திய அளவில் பிரபலமான நடிகைகள் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து வெளிவந்த introducing ராயா என்கிற கிலிம்ப்ஸ் வீடியோ சர்ச்சையில் சிக்கினாலும், இதையடுத்து வெளியான டீசர் வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கியாரா ஓப்பன் டாக்
டாக்சிக் திரைப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையில், டாக்சிக் திரைப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில், "ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான உறவுகளை நான் பார்க்கும் விதத்தை 'டாக்சிக்' திரைப்படம் மாற்றிவிட்டது. இந்த கதை காதலில் இருக்கும் ஒரு விதமான சுதந்திரத்தையும், விடுதலையையும் ஆழமாக ஆராய்கிறது. ஒரு கட்டத்தில், நானும் என் சிந்தனைகளில் இவ்வளவு பற்றற்றவளாகவம், சுதந்திரமாகவும், பயமின்றியும் இருக்க முடியுமா என நினைத்தேன்" என கூறியுள்ளார்.