கிழக்கு சீமையிலே படத்தில் ஆத்தங்கர மரமே பாடலில் வந்த நாயகியா இவர்?- மாடர்ன் உடையில் ஆளே மாறிவிட்டாரே?
கிழக்கு சீமையிலே
பாரதிராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் பேச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் ருத்ரா.
கேரளாவை சேர்ந்த இவர் நாயகியாக மட்டும் இல்லாது நடன கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார். 1991ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படத்தில் சிறு கதாபாத்திரம் நடித்து தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

லேட்டஸ்ட் க்ளிக்
கடைசியாக தமிழில் ஆர்யாவின் ஓரம் போ படத்தில் நடித்திருந்த இவர் இப்போது மலையாளம் மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.
புடவை, தாவணியில் அப்போது பார்த்து பழகிய ரசிகர்கள் ருத்ராவின் மாடர்ன் உடை புகைப்படங்களை பார்த்து கிழக்கு சீமையிலே பட நடிகையா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

எதிர்ப்பாராததை எதிர்பாருங்கள், பிக்பாஸ் 7வது சீசன் போட்டியாளர்கள் இவர்களா?- சோனியா அகர்வால் என யார் யார் பாருங்க