"நான் இந்த விஷயத்தை செய்யாமல் உயிரை விடமாட்டேன்" - KPY பாலா
KPY பாலா
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரம் KPY பாலா, கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமானார்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி சீசன் 3-லும் கலந்து கொண்டு பாலா எப்பயும் போல கலக்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியை அவருக்காகவே பார்க்கும் நிறைய ரசிகர்கள் உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் டெலீவிஸின் அவார்ட்ஸ் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் பாலா செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பாட்-இடம் விருது பெற்றுள்ளார்.
மேலும் அப்போது பாலா செய்து வரும் பெரும் விஷயம் குறித்து தெரியவந்துள்ளது. ஆம் பாலா மாணவர்களின் படிப்பிற்கு , முதியவர்கள் உள்ளிட்டோருக்கு உதவி செய்து வருகிறார்.
அதுமட்டுமின்றி பாலா "100 பேருக்கு கல்வி கொடுக்காமல் நான் என் உயிரை கொடுக்கமாட்டேன்" என பேசியுள்ளார். இதற்கு அரங்கம் முழுவதும் கரகோஷம் எழுப்பியுள்ளனர்.