கிருஷ்ணாவின் போதைப்பொருள் பரிசோதனை ரிசல்ட் வெளிவந்தது, திடீர் திருப்பம்
ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.
ஆனால் இவர் போதைப் பொருள் வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் கைதானார். படம் நடித்ததற்காக பண பாக்கியை கொக்கைன் கொடுத்து ஈடுகட்டினார்கள்.
ஒரு முறை, இரண்டு முறை பயன்படுத்த பின் நானே கேட்டு வாங்கும் அளவிற்கு அடிமையாகிவிட்டேன், தவறு தான் என கூறியிருந்தார்.
மருத்துவ ரிப்போர்ட்
ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவின் இந்த போதப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் தேடப்பட்டு வந்தார்.
தலைமறைவாகி இருந்த கிருஷ்ணாவை போலீசார் கேரளாவில் பிடித்தனர், அவர் போதைப் பொருள் தான் பயன்படுத்தவில்லை என கூறியிருந்தார்.
இதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது, அதில் நடிகர் கிருஷ்ணா போதைப் பொருளை பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என தகவல் வந்துள்ளது.