செல்பி எடுக்க வந்த குள்ளமான நபர் செய்த காரியம்.. நடிகை ஷாக்
பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் உடன் செல்பி எடுக்க வந்த நபர் செய்த விஷயத்தால் நடிகை ஷாக் ஆனார். சுற்றி இருந்தவர்களும் டென்ஷன் ஆகிவிட்டனர்.
செல்பி
பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை பார்க்க ஒரு பெரிய கூட்டம்கூடிவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதுவும் அவர்களிடம் செல்பி எடுக்க எல்லோரும் அலைமோதுவார்கள்.
ஆனால் செல்பி எடுக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் உடன் செல்பி எடுக்க வந்த குள்ளமான நபர் செய்த காரியம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
க்ரிதி சனோன் ஷாக்
நடிகை க்ரிதி சனோனை போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் அதிகம் கூடி இருந்த நிலையில் தான் ஒரு குள்ளமான நபர் நடுவில் புகுந்து செல்பி எடுக்க வந்தார். அவரை போட்டோகிராபர்கள் கிண்டல் செய்த நிலையில் நடிகை அந்த நபரை அருகில் வர வைத்து அவருக்காக கீழே வந்து அவரது போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார்.
ஆனால் அந்த நபர் அடுத்து கூலிங் கிளாஸை போட்டுக்கொண்டு இன்னொரு செல்பி எடுங்க என நடிகையை பார்த்து சொன்னதும் அவர் ஷாக் ஆகி விட்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாட்கள் வந்த கடை எங்கே இருக்கிறது தெரியுமா?- நிஜ பெயர் இதுவா?