சூப்பர் சிங்கரில் பிரியங்காவுக்கு பதில் புது தொகுப்பாளர்.. முதல் நாளே சொன்ன ஒரு விஷயம்
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக இருக்கும் பிரியங்காவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து அவர் சூப்பர் சிங்கர் ஷோவில் இருந்து விலகி இருக்கிறார்.
அவருக்கு பதிலாக தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ஷோவை லட்சுமி பிரியா தொகுத்து வழங்குகிறார். மகாநதி சீரியல் நடிகையான அவர் தான் இனி மகாபா ஆனந்த் உடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் ஷோவை தொகுத்து வழங்க போகிறார்.
லட்சுமி பிரியா பதிவு
இந்நிலையில் நடிகை லட்சுமி பிரியா சூப்பர் சிங்கர் ஷோவை தொகுத்து வழங்குவது பற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
"ப்ரோமோவுக்கே இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்னுடைய பெஸ்ட் கொடுத்திருக்கிறேன் என சொல்ல முடியாது. ஆனால் முயற்சித்து இருக்கிறேன். நான் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன், இன்னும் நீண்ட தூரம் போக வேண்டி இருக்கிறது."
"இதையும் சொல்ல வேண்டும். எல்லா தொகுப்பாளர்கள் மீதும் பெரிய மரியாதை வந்திருக்கிறது. இது ஈஸியான வேலை இல்லை" என லட்சுமி பிரியா பதிவிட்டு இருக்கிறார்.