தனுஷ் - ஐஸ்வர்யாவை பேசி சேர்த்து வைங்க: லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கொடுத்த பதில்
தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இருவரும் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்து உள்ளனர். இந்த அறிவிப்பு சினிமா துறையினர், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும் அவர்கள் இந்த முடிவெடுக்க காரணம் என்ன என பல்வேறு செய்திகளும், வதந்திகளும் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை ஷோ நடத்தி குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் நெட்டிசன் ஒருவர் "தனுஷ் ஐஸ்வர்யாவை அழைத்து பேசி சேர்த்து வைங்க" என கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்ன சொல்லி இருக்கிறார் என பாருங்க.
"அவர்கள் மரியாதையுடன் பிரிந்துசெல்கிறார்கள். ஒருவரை ஒருவர் வெளிப்படையாக குறை சொல்லி மனகஷ்டம் ஏற்படுத்தாமல், விவாகரத்துக்கு முன்பே வேறு ஒருவருடன் ரொமான்ஸ் செய்யாமல் இருக்கின்றனர். அவர்களை தனியாக விடுங்கள்" என அவர் கூறி உள்ளார்.
They are moving away respectfully, not causing mental trauma to each other by badmouthing publicly or romancing with someone else before getting legally divorced, pls leave them alone,
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 17, 2022
மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இதை அறிவிக்காமல் இருந்திருந்தால் அவர்களை பற்றி பல விஷயங்கள் செய்திகளில் அவர்கள் அனுமதி இல்லாமல் வந்திருக்கும். மேலும் கண்ணியமான வகையில் அறிவிப்பு வெளிவிட்டும் சமந்தா மோசமான விஷயங்களை சந்தித்தார் எனவும் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி இருக்கிறார்.
The problem is that, if they don’t announce, distorted news will come out, without their permission, wrong information might be passed on. But even after a very graceful and dignified announcement @Samanthaprabhu2 had to endure v cruel stuff.
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 18, 2022