மறைந்த நடிகர் விவேக்கின் கனவு இதுதானா, நிறைவேறுமா?
சின்னக் கலைவாணர் விவேக் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். அவரது உடல் அஞ்சலிக்கு விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
காலை முதல் பிரபலங்கள் அனைவரும் விவேக் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதோடு சமூக வலைதளங்களில் விவேக் அவர்களை பற்றிய சில விஷயங்களையும் பகிர்கிறார்கள்.
விவேக் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா அவர்களை முன்நிறுத்தி கோடி கணக்கில் மரக் கன்றுகள் நட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இதுவரை அவர் 33 லட்சம் மரக் கன்றுகளை நட்டுவிட்டாராம். அவரது கனவு நினைவாவதற்குள் விவேக் இந்த உலகை விட்டே பிரிந்துவிட்டார்.
விவேக் அவர்களை ரசிப்பவர்கள் அவரது கனவை வருங்காலத்தில் நிறைவேற்றி வைப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.