நடிகர் விவேக் சமீபத்தில் இப்படி ஒரு போட்டோ ஷுட் எடுத்தாரா?- செமயாக உள்ளாரே
கடந்த ஏப்ரல் 17ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இந்த உலகை விட்டு பிரிந்தவர் நடிகர் விவேக். எப்போதும் ஆக்டீவாக தனது இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருந்த அவர் மண்ணை விட்டு பிரிந்துவிட்டார்.
அவரது இலக்கு இந்த மண்ணில் 1 கோடி செடிகள் நட வேண்டும் என்பது தான். அவருடன் இணைந்து பலர் அதற்காக உழைத்தார்கள்.
விவேக் அவர்கள் இறந்த நாளன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரவர் தங்களது இல்லங்களில் செடிகள் நட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
தற்போது விவேக் அவர்கள் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. அதாவது அவர் இந்த கொரோனா லாக் டவுன் சமயத்தில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் அதிகம் ஷேர் ஆக அட நம்ம விவேக் சாரா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.