கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விஷயத்தை செய்ய மாட்டேன் - லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் சரவணன்
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.

லெஜண்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லெஜண்ட் சரவணன் யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
எதிர்நீச்சல், காக்கி சட்டை, கருடன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமாருடன் லெஜண்ட் சரவணன் கைகோர்த்தார். இப்படத்திற்கு லீடர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
அதை செய்ய மாட்டேன்
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விஷயத்தை செய்ய மாட்டேன் என சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது குறித்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது, "என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் சிகரெட் பிடித்ததில்லை, மது அருந்தியதில்லை. படங்களிலும் கூட புகைபிடிப்பது போல், மது அருந்துவது போல் நடிக்க மாட்டேன்" என வெளிப்படையாக பேசியுள்ளார்.
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri