அஞ்சான் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம்.. முதல் முறையாக கூறிய இயக்குனர் லிங்குசாமி

By Kathick Jul 10, 2022 05:15 AM GMT
Report

அஞ்சான் தோல்விக்கு இதுதான் காரணம்

கடந்த 2014ஆம் ஆண்டு சூர்யா மற்றும் சமந்தா இணைந்து நடித்து லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அஞ்சான். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் தமிழகத்தில் மாபெரும் தோல்வியை தழுவியது.

அஞ்சான் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம்.. முதல் முறையாக கூறிய இயக்குனர் லிங்குசாமி | Lingusamy About Anjaan Failure In Tamil Nadu

இந்நிலையில், தற்போது அஞ்சான் படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து லிங்குசாமி பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.

அவர் கூறியதவது : ' அஞ்சான் திரைப்படம் கேரளாவில் மாபெரும் வெற்றியடைந்தது. அதே போல் ஹிந்தியிலும் சூப்பர்ஹிட். Youtubeல் அதிகமாக பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் அஞ்சான் படமும் ஒன்று. அப்படத்தின் தோல்விக்கு நான் கூட காரணமாக இருக்கலாம். திரைக்கதை கூட ஒரு காரணம் தான். பல கதைகள் இப்படத்திற்காக மாறியது ‘.

அஞ்சான் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம்.. முதல் முறையாக கூறிய இயக்குனர் லிங்குசாமி | Lingusamy About Anjaan Failure In Tamil Nadu

‘ எனக்கு ஒரு கதை நிலையாக நின்றாள் தான் பிடிக்கும். அதுவும் ஒரு இப்படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மக்களுக்கு எதோ ஒரு வகையில் அப்படம் பிடிக்காத காரணத்தினால் தான், ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு ஒரு படம் மிகவும் பிடித்திருந்தால், அப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ‘.  என்று கூறியுள்ளார்.

வருகிற ஜூலை 15ஆம் தேதி லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள வாரியார் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US