தளபதி 67 படத்தின் கதை குறித்து முன்பே பேசியிருந்த லோகேஷ் கனகராஜ்! செம மாஸ் தகவல்..
தளபதி 67
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவராகியுள்ளார், இவர் இயக்கத்தில் வெளியான 4 திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
அதன்படி மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்தடுத்து பிளாக் பூஸ்டர் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் அடுத்து மீண்டும் விஜய்யின் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும், ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட தகவலாக தான் கூறப்படுகிறது.
விக்ரம் திரைப்படம் LCU-வாக மாறவுள்ள நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்பும் தளபதி 67 திரைப்படத்தின் மேல் தான் இருக்கிறது. ரசிகர்கள் ஏற்கனவே விஜய்யை விக்ரம் 3 படத்தில் கொண்டு வரும் படி கூறிவருகின்றனர்.
இதனிடையே தளபதி 67 படத்தின் தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி இயக்குனர் லோகேஷ் முன்பு ஒரு பேட்டியில் தான் ஒரு gangster கதையை உருவாக்கி வருவதாகவும், அந்த கதையை முடிக்க பல நாட்கள் ஆகும்" என மாஸ்டர் படத்திற்கு முன்பு அளித்திருந்த பேட்டியில் பேசியிருந்தார்.
இதனை தற்போது ரசிகர்கள் தளபதி 67 படம் லோகேஷ் உருவாக்கி வரும் கதையாக இருக்கும் என விவாதித்து வருகின்றனர். இது உண்மையாக இருந்தால் செம மாஸ்ஸாக இருக்கும்.

ரஜினியின் பட வசூலை முறியடிக்க வெறும் மூன்றே நாட்களை எடுத்துக்கொண்ட விக்ரம்..
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri