நடிகர் விவேக்கின் நினைவாக சிம்பு மற்றும் மாநாடு படக்குழுவினர்கள் செய்த விஷயம், ட்ரெண்டிங் புகைப்படம்
தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் நடிகர் விவேக், பல வருடங்களாக சினிமாவின் மூலம் ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வந்தார்.
மேலும் இவர் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார், இதனால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகும் அதிர்ச்சிக்கு உள்ளானது.
இந்நிலையில் நடிகர் விவேக்கின் நிறைவேறாத ஆசையாக இருப்பது 1 கோடி மரங்களை நடுவது, இதில் கிட்டத்தட்ட 33 லட்சத்திற்கும் மேலான மரங்களை விவேக் நட்டுள்ளார்.
மேலும் தற்போது இதனை நிறைவேற்று வகையில் அவரின் ரசிகர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் மர கன்றுகளை நட்டுவருகின்றனர்.
அந்த வகையில் தற்போது சிம்பு மற்றும் மாநாடு படக்குழுவினர்கள் மரக்கன்றுகளை நடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.