மீண்டும் விஜய் டிவியில் மறுஒளிபரப்பாகும் சூப்பர் சீரியல்- எத்தனை மணிக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் லாக் டவுன் 3, 4 நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. முழு ஊரடங்கு என்பதால் எந்த ஒரு படப்பிடிப்பும் நடக்கவில்லை.
எனவே தொலைக்காட்சி சீரியல்களின் பழைய காட்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். சிலர் படப்பிடிப்பை வேறு மாநிலங்களுக்கு சென்று எடுக்கிறார்கள்.
விஜய்யில் நிறைய சீரியல்களின் பழைய எபிசோடுகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் விஜய் டிவி ஏற்கெனவே ஒளிபரப்பிய ஒரு காவியத்தை மீண்டும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர்.
சீரியல் என்று கூற முடியாது ஒரு காவியம் என்று தான் கூற வேண்டும். பிரம்மாண்டமாக ஹிந்தியில் உருவான மகாபாரதம் தான் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
வரும் திங்கள் முதல் காலை 10 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மகாபாரதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu