காவேரி மிஸ் தான் தனது அம்மா என அறியும் அம்மு... பரபரப்பான மகாநதி சீரியல் புரொமோ
மகாநதி
விஜய் தொலைக்காட்சியில் அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி.
4 அக்கா-தங்கைகளின் கதையாக ஆரம்பிக்கப்பட்டது இப்போது விஜய்-காவேரி ஜோடியின் கதையாக மாறிவிட்டது.

ராகவ் ஏற்படுத்திய விபத்தால் காவேரி பழைய விஷயங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார். காவேரி இறந்துவிட்டார் என இருந்த விஜய் அவரைப்பார்த்ததும் சந்தோஷப்பட்டார், ஆனால் தன்னை காவேரிக்கு சுத்தமாக தெரியவில்லை என்றதும் மனம் உடைந்துபோனார்.
கடைசியாக கதையில் நர்மதா பிரச்சனை தான் சென்றது, அதை வழக்கம் போல் விஜய் கூலாக பேசி முடித்துவிட்டார்.
புரொமோ
தற்போது மகாநதி சீரியலின் புதிய புரொமோ வெளியானது.
அதில், அம்மு தனது பாட்டியிடம் காவேரி மிஸ் என் அம்மா போலவே உள்ளாரே, இருவரும் ஒரே மாதிரி இருப்பார்களா என பல கேள்விகள் கேட்கிறார்.

அம்முவின் கேள்விகளை தாங்க முடியாமல் அவர் காவேரி மிஸ் தான் உன் அம்மா என்கிறார். அதைக்கேட்டதும் அம்மு ஷாக் ஆகி நிற்கிறார், அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.
அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை: மெழுகுவர்த்தி பஞ்சாயத்து தொடர்பில் மேயர் பிரியா விளக்கம்! IBC Tamilnadu
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri