விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ
மகாநதி
விஜய் டிவியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கிவந்த சீரியல் மகாநதி.
4 சகோதரிகளின் வாழ்க்கை கதையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் இப்போது விஜய்-காவேரி என்ற ஜோடியின் காதல் பயணத்தை முக்கியமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
ராகவ் ஏற்படுத்திய விபத்தில் காவேரி எல்லா விஷயங்களையும் மறந்துவிடுகிறார். அவரிடம் எல்லா உண்மையையும் கூற அவரது குடும்பத்தினர் பயப்படுகிறார்கள், காரணம் சொல்லும் உண்மை அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துமோ என பயப்படுகிறார்கள்.

அடுத்து என்ன
தற்போது காவேரிக்கு பழைய நினைவுகள் வர வேண்டும், தங்களது குழந்தையுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என விஜய் போராடி வருகிறார். ஆனால் காவேரியோ எந்த நியாபகமும் இல்லாமல் விஜய்க்கு திருமணம் செய்துவைக்க பெண் பார்ப்பது என இருக்கிறார்.

இந்த நிலையில் மகாநதி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரிய வந்துள்ளது. பள்ளியில் Mothers Day நிகழ்ச்சி நடப்பதாக தெரிகிறது, அதில் விஜய் சாரதா அம்மா காவேரி, குழந்தை என அனைவரும் இருக்கிறார்கள்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan