மகாநதி சீரியலில் விபத்திற்கு பிறகு காவேரிக்கு Memory Loss, விஜய் நிலைமை என்ன தெரியுமா?.. போட்டோவுடன் இதோ
மகாநதி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் நிறைய ஜோடிகள் கொண்டாடப்படுகிறார்கள், அதில் ஒரு ஜோடி தான் விஜய்-காவேரி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி என்ற சீரியலில் இந்த ஜோடி நடிக்கிறார்கள், அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களம் அமைந்து வருகிறது. அதாவது பசுபதி காவேரி குடும்பத்தை பழி வாங்க சந்தானத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என நம்ப வைத்தார்.
அந்த உண்மை கண்டுபிடித்து விஜய் ராகவை வெளுத்து வாங்கினார். அந்த கோபத்தில் ராகவ், வெளியே சென்ற விஜய்-காவேரியை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றார். மோகமான விபத்தில் சிக்கிய விஜய்-காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.

போட்டோ
இன்றைய எபிசோடில், காவேரி தனது குடும்பத்தினருக்கு ஒரு ஷாக் கொடுக்கிறார். அதாவது எல்லோரும் வந்துள்ளீர்கள், அப்பா எங்கே என கேட்க அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
இன்னொரு பக்கம் விஜய்யின் பாட்டி, காவேரி இருக்கும் இடத்தில் விஜய் இருக்கக்கூடாது. நாம் அவனை வேறு எங்கேயாவது கொண்டு சென்று சிகிச்சை கொடுக்கலாம். காவேரியை எப்போது கல்யாணம் செய்தானோ அப்போது முதல் விஜய்க்கு பிரச்சனை தான் என்கிறார்.

பாட்டி சொன்னதற்கு தாத்தாவும் சம்மதம் தெரிவிப்பது போல் நிற்கிறார். இந்த நிலையில் விபத்திற்கு பிறகு விஜய்யின் நிலைமை என்ன என்பது படப்பிடிப்பு தள புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.
அதாவது விஜய்யின் உடல்நலம் சரியாகி அவர் ஏதோ கோவிலில் இருப்பது போல் புகைப்படம் அமைந்துள்ளது.
இதோ போட்டோ,
