மாகாபா, பிரியங்காவிற்கு சூப்பர் சிங்கர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க இவ்வளவு சம்பளமா?
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என இரண்டு வகை நிகழ்ச்சிகளையும் சேர்த்து ஒரு 20 சீசன்கள் கூட வந்திருக்கும்.
அந்த அளவிற்கு இந்நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கூட வரவேற்பு குறையாமல் படு ஹிட்டாக ஓடுகிறது. நிகழ்ச்சி குழுவினரும் மக்களை அதிகம் பார்க்க வைக்க நிறைய வித்தியாசமான புதுபுது விஷயங்களை புகுத்துகிறார்கள்.
அண்மையில் நடந்த ஜுனியர்களுக்கான நிகழ்ச்சியும் முடிந்துவிட்டது, வெற்றியாளர் கிருஷாங் அறிவிக்கப்பட்டுவிட்டார்.
மாகாபா-பிரியங்கா சம்பளம்
சூப்பர் சிங்கர் கடந்த பல சீசன்களை மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இவர்களை தாண்டி இந்நிகழ்ச்சியை யாராலும் அருமையாக கொண்டு செல்ல முடியாது என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது.
இவர்கள் இருவருக்கும் இந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க மட்டும் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
அச்சு அசல் நடிகர் விஜய் சேதுபதி போலவே இருக்கும் நபர்- செம வைரல் போட்டோ, ஆச்சரியத்தில் ரசிகர்கள்