பா. ரஞ்சித் படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகை? சரியாக நடிக்காதது தான் காரணமா
தங்கலான்
பா. ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார்.
மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வெளியேற்றப்பட்ட நடிகை?
இந்நிலையில், இப்படத்தின் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வந்த நடிகை மாளவிகா மோகனனின் நடிப்பு சரியில்லாத காரணத்தினால், படத்திலிருந்து அவரை நீக்க இயக்குனர் பா. ரஞ்சித் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா. ரஞ்சித் எதிர்பார்த்த அளவிற்கும் அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான அளவிற்கும் மாளவிகா மோகனன் நடிக்கவில்லை என்பதால் விரைவில் மாளவிகா மோகனனுக்கு பதிலாக வேறொரு நடிகை இப்படத்தில் நடிக்க வருவார் என்று கூறப்படுகிறது.
Also Read This : ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கிய முதல் நடிகர் இவர் தான்.. ரஜினி, கமல் கிடையாது