தியேட்டருக்கு நிஜ துப்பாக்கியுடன் வந்த நபர் கைது! லாக்கப்பில் ஆர்ஆர்ஆர் ரசிகர்
இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் திரைக்கு வந்திருக்கிறது. படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்து வருகிறது. பிரம்மாண்டமான காட்சிகள் பற்றி தான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
துப்பாக்கி உடன் வந்த நபர்
இந்நிலையில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் அன்னபூர்ணா தியேட்டருக்கு ஒரு நபர் நிஜ துப்பாக்கியை எடுத்து வந்து இருக்கிறார்.
பாலாஜி என்ற அந்த நபர் நீண்ட தாடி, முடி உடன் இருப்பதை பார்க்கும் போது நிஜ ரௌடி போல இருந்தார். அவரை வீடியோ எடுக்கும்போது அது நிஜ துப்பாக்கியா என கேட்க அவரும் ஆம் என கூறினார். அதில் ஒரே ஒரு புல்லட் மட்டும் இருக்கிறது என தெரிவித்தார்.

கைது
அவரை அங்கிருக்கும் லோக்கல் போலீஸ் கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்து இருக்கின்றனர்.
துப்பாக்கியை எடுத்து வந்தது ஏன் என தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் பேசிய வீடியோ இதோ..
From extreme #swag to #RRR screening to prison, all in one day for this man. Thread in videos.
— Krishnamurthy (@krishna0302) March 25, 2022
Here's #1 pic.twitter.com/fcFm4KvdK0