அவதார் 2 படம் பார்த்த நபர் தியேட்டரில் மரணம்! அதிர்ச்சி சம்பவம்
அவதார் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 41 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. தற்போது நடந்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தியேட்டரில் மரணம்
ஆந்திராவை சேர்ந்த லட்சுமிரெட்டி ஸ்ரீனு என்பவர் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான அவதார் 2 படத்தை தனது சகோதரன் ராஜுவுடன் பார்க்க சென்றுள்ளார்.
படத்தை அவர் பார்த்து கொண்டிருந்த லட்சுமிரெட்டி திடீரென சரிந்து விழுந்தார். இதனையடுத்து அவரின் தம்பி ராஜு உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். உயிரிழந்த லட்சுமிரெட்டிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
அவதார் முதல் பாகத்திலும் மரணம்
முன்னதாக, தைவான் நாட்டில் 2010 -ஆம் ஆண்டு வெளியானது அவதார் படத்தின் முதல் பாகம். இதைப் பார்க்க சென்ற 42 வயது நபர் ஒருவர் படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது, மேலும் படத்தில் வரும் உற்சாகமான காட்சியினால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றனர்.

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
