மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வைத்த இளையராஜா
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
மஞ்சணத்தி
பைசன்: காளைமாடன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் மஞ்சணத்தி. இப்படத்தை நாவி ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்கந்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் கதிர், விது, கயாடு லோஹர், பிரியங்கா மோகன், பூர்ணிமா ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. படப்பிடிப்பை இளையராஜா விளக்கு ஏற்றி தொடங்கி வைத்துள்ளார்.

படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்கிற அறிவிப்பு மட்டுமின்றி, மஞ்சணத்தி திரைப்படத்திற்கான புதிய போஸ்டரையும் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இளையராஜாவிற்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
