அவன் அவன் யார் யாரையோ கூட்டிட்டு போறான்.. விஜய்யை தாக்கி பேசிய மன்சூர் அலி கான்
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றது பற்றி தான் மொத்த நாடும் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தது. த்ரிஷாவை தாக்கி நடிகர் பார்த்திபன் நேற்று பேசிய நிலையில் அவருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்திருந்தார் த்ரிஷா.
இந்நிலையில் விஜய்யை மறைமுகமாக நடிகர் மன்சூர் அலி கான் தாக்கி பேசி இருக்கிறார்.

விஜய் மீது தாக்கு
காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த இப்தார் நோம்பு திறப்பு விழாவில் பேசிய மன்சூர் அலி கான் தான் தனது மனைவியை வலுக்கட்டாயமாக அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததாக கூறினார்.
"என் மனைவி எங்கேயும் வர மாட்டாங்க. நான் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தேன். அவன் அவன் யார் யாரையோ கூட்டிட்டு போறான். நீ வாம்மா என அழைத்து வந்தேன். நான் யாரையும் குறை சொல்ல வரல" என மன்சூர் அலி கான் கூறி இருக்கிறார்.
அவர் விஜய் மற்றும் த்ரிஷாவை தான் இப்படி தாக்கி பேசி இருக்கிறார்.
Mansoor Ali khan kondu serupala adikuraru Vijay ya 😂😂😂
— Red Dragon™🐉🔥 (@ajithianforevr) March 8, 2026
pic.twitter.com/P8XGnPKfJ5