சென்சேஷனல் இயக்குநரான மாரி செல்வராஜ் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?
மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் ஆகஸ்ட் - 23 வெளிவந்த படம் வாழை. இவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து வாழை படம் எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
இத்தனை கோடியா?
இந்நிலையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மாரி செல்வராஜுக்கு ரூ.30 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் என்ற ஊரில் அவருக்கு சொந்த வீடு இருக்கிறது. இதுதவிர சென்னையிலும் ஒரு வீடு வாங்கி வசித்து வருகிறார். இவரிடம் மினி கூப்பர் காரும் உள்ளது.