மீண்டும் தமிழில் நடிக்க வரும் நடிகை அனுஷ்கா! எந்த படத்தில் நடிக்கவுள்ளார் தெரியுமா?
நடிகை அனுஷ்கா தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர், இவர் தமிழ் தெலுங்கு என பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர், இயக்குனர் P.வாசு இயக்கியிருந்தார்.
இதனிடையே மீண்டும் வாசு இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
மேலும் தற்போது சந்திரமுகி-2 படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனுஷ்கா ஏற்கனவே ‘சந்திரமுகி’ போன்ற திகில் கதையம்சம் உள்ள ‘அருந்ததி’, ‘பாகமதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆதலால் ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க அவரை அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.