இது அவர் நடித்திருக்க வேண்டிய படம்: பொன்னியின் செல்வன் மேடையிலேயே கூறிய மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் மணிரத்தினம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேடையில் பேசிய பிரபலங்கள் பலரும் படத்தின் பிரம்மாண்டம் பற்றி பேசினார்கள். தமிழர்கள் பெருமை பற்றி உலகிற்கு சொல்லும் படம் இது என கார்த்தி பெருமையாக கூறினார்.
அதன் பின் மேடையில் பேசிய இயக்குனர் மணிரத்னம், "பொன்னியின் செல்வன் கதையை படமாக்க 80களில் இருந்தே முயற்சி செய்கிறார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு நடித்திருக்க வேண்டிய படம். ஏதோ காரணத்தால் நின்றுவிட்டது. அவர் எங்களுக்காக விட்டுவெச்சிட்டு போயிருக்கார். இன்றைக்கு தான் புரிந்தது" என கூறி இருக்கிறார்.
