மூன்று முடிச்சு சீரியலின் பரபரப்பான காட்சியை எப்படி எடுத்துள்ளார்கள் பாருங்க... படப்பிடிப்பு தள வீடியோ
மூன்று முடிச்சு
சன் தொலைக்காட்சியில் ஒரு திருமண எபிசோட் வந்தால் போதும், அதை வைத்து 2 மாதத்திற்கு ஓட்டுவார்கள்.
அப்படி சமீபத்தில் இந்த திருமணம் நடக்குமா நடக்காத என்ற சந்தேகத்தோடு மூன்று முடிச்சு சீரியலில் ரஞ்சித்-சுரேகா திருமண ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் மாப்பிள்ளை ரஞ்சித் நல்லவன் இல்லை, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கொடூர நபராக இருக்கிறார்.

பெண்களின் மோசமான வீடியோ எடுப்பது, கொலை செய்வது என நிறைய விஷயங்கள் செய்கிறார். இந்த உண்மைகள் நாயகி நந்தினிக்கு தெரிந்தாலும் ஆதாரம் இல்லாமல் வெளியே சொல்ல முடியவில்லை.
ஷுட்டிங் வீடியோ
ஆனால் எப்படியோ அடுத்தடுத்த பரபரப்பான எபிசோடுகளுக்கு பிறகு சூர்யா-நந்தினி ஆதாரத்தை திரட்டி சுரேகா கழுத்தில் ரஞ்சித் தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்.

உண்மைகள் வெளிவந்தும் திருந்தாத ரஞ்சித் துப்பாக்கியை வைத்து சுரேக்காவை சுட்டு விடுவேன் என மிரட்டுகிறார். அப்போதும் எல்லோரும் தடுக்க செல்லும் போது எதிர்ப்பாராத விதமாக நந்தினியை சுட்டுவிடுகிறார்.
தற்போது இந்த பரபரப்பான காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டது என்ற படப்பிடிப்பு தள வீடியோவை ரஞ்சித்தாக நடித்த அருண் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.