பிரிக்க நினைத்து கிரிமினல் வேலை செய்த சுந்தரவல்லி, ஆனால் சூர்யா, நந்தினிக்குள் நடந்த விஷயம்.. மூன்று முடிச்சு சீரியல் புரொமோ
சன் தொலைக்காட்சி என்றாலே சீரியல்கள், தொடர்களின் ராஜாவாக பல வருடங்களாக கலக்கி வருகிறார்கள்.
சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற தொடர்கள் எல்லாம் டிஆர்பியின் உச்சத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. சிங்கப்பெண்ணேவில் ஆனந்தி கர்ப்பம் ஆனதில் இருந்து அதிரடி திருப்பங்களாக ஒளிபரப்பாகிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது, எப்பா அடுத்து என்ன ஆகும், என்ன ஆகும் என ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்து பார்க்க வைக்கிறது.
மூன்று முடிச்சு
அடுத்து விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் சீரியல் மூன்று முடிச்சு.
சூர்யா-நந்தினி சூப்பர் ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல் ஜோடியாக மாறிவிட்டார்கள். இப்போது கதையில் தீபாவளிக்கு வெடி வெடிக்கும் போது சூர்யாவிற்கு எதிர்ப்பாரா விதமாக விபத்து ஏற்பட படுத்த படுக்கையில் உள்ளார்.

இதனை பயன்படுத்தி சுந்தரவல்லி நந்தினி-சூர்யாவை பிரிக்க நிறைய பிளான் போட்டார். ஆனால் இன்றைய எபிசோட் புரொமோவில் அவரது பிளான் சுக்கு நூறாகிவிட்டது.
சூர்யா, நந்தினி இங்கே தான் இருக்கிறார் என வீட்டைவிட்டு வெளியே வர அப்போது நந்தினியும் பார்க்க இருவரும் இணைகிறார்கள். இதனைக் கண்டு சுந்தரவல்லி கடும் கோபம் கொள்கிறார், அடுத்து என்ன பிளான் போட போகிறாரோ பொறுத்திருந்து காண்போம்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri