சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் இது தான்..! என்ன திரைப்படம் தெரியுமா?
சீயான் விக்ரம் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் உள்ளவர். இவர் நடிப்பில் கடைசியாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியானது,
அதனை தொடர்ந்து இவர் கோப்ரா திரைப்படத்தில் பிஸியாகி விட்டார். இபபடத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் சீயான் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் மஹாவீர் கர்ணா என இரண்டு மிக பெரிய வரலாற்று திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விக்ரம் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் குறித்து தான் நாம் பார்க்கவுள்ளோம்.
ஆம், கடந்த 2003 ஆண்டு விக்ரம் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியான தூள் திரைப்படம் அதிக நாட்கள் ஓடியுள்ளது.
இப்படம் 210 நாட்கள் சென்னையில் ஓடி சாதனை படைத்துள்ளது என தெரியவந்துள்ளது.