திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பேசிய மிருணாள் தாகூர்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா
மிருணாள் தாகூர்
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து தெலுங்கில் நானி உடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்த Hi நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அடுத்ததாக Son of Sardaar 2, Dacoit: A Love Story, Hai Jawani Toh Ishq Hona Hai ஆகிய திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவரவுள்ளது. படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
மனம் திறந்து பேசிய நடிகை
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை மிருணாள் தாகூர்.
இதில் "திருமணம் செய்துகொள்வதும், தாயாக மாறுவதும் சிறு வயதிலிருந்தே எனது கனவு ஆகும். இருப்பினும் தனது கவனம் முழுவதும் தற்போது திரைத்துறையில் மட்டுமே உள்ளது" என கூறியுள்ளார்.