வாரிசு நடிகர்களால் மிருணாள் தாகூருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்.. அவரே சொன்ன தகவல்!!
மிருணாள் தாகூர்
பாலிவுட் படங்களில் நடித்து வந்த மிருணாள் தாகூர், சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்தை அடுத்து இவர் ஹாய் நானா படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கும் ஓரளவு நல்ல வரவேற்பு கொடுத்தனர். தற்போது மிருணாள் தாகூருக்கு தென்னிந்திய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
Nepotism
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர், பாலிவுட்டில் இருக்கும் Nepotism குறித்து பேசியுள்ளனர். அதில் அவர்,"இரவில் விருது விழா நடந்தது. அதை முடித்தவுடன் பேட்டி கொடுத்து கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில் வாரிசு நடிகர்கள் நடிகைகள் அங்கு வந்தார்கள். உடனே பேட்டி எடுத்துக்கொண்டு இருந்த பத்திரிகையாளர்கள் அவர்களிடம் சென்றுவிட்டனர்".
"Nepotism என்ற பெயரில் அவர்களை பழி போட முடியாது. இதில் அவர்களுடைய தவறு எதுவும் இல்லை. மீடியா வாரிசு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே காரணம்" என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.