அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளிவர கஷ்டமாக இருந்தது!! ஓபன்னாக பேசிய மிருணாள் தாகூர்

By Dhiviyarajan Apr 12, 2024 10:00 AM GMT
Report

மிருணாள் தாகூர்

ஹிந்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாகூர், கடந்த 2022 ம் ஆண்டு ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பும், மிருணாள் தாகூரின் நடிப்பும் எதார்த்தமாக இருந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பின் மிருணாள் தாகூருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் பேமிலி ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து இருந்தனர்.

அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளிவர கஷ்டமாக இருந்தது!! ஓபன்னாக பேசிய மிருணாள் தாகூர் | Mrunal Thakur Open Talk

பேட்டி

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர், "மிகவும் கடினமானது என்னவென்றால் ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது இதயம் உடைவது போல் இருக்கும்".

"நாம் ஒரு கதாபாத்திரத்தை நேசித்துவிட்டால் அவ்வாறாகவே மாறிவிடுகிறோம். அப்படியான ஒரு கதாபாத்திரம் தான் சீதா மகாலட்சுமி. சீதா கதாபாத்திரத்தில் இருந்து வெளிவர மிகவும் சிரமமாக இருந்தது" என்று மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார்.

அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளிவர கஷ்டமாக இருந்தது!! ஓபன்னாக பேசிய மிருணாள் தாகூர் | Mrunal Thakur Open Talk

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US