மகன் மடியில் தனது உயிரைவிட்ட மயில்சாமி- கடைசி நிமிடங்கள் குறித்து கூறிய எம்.எஸ்.பாஸ்கர்

By Yathrika Feb 23, 2023 02:59 PM GMT
Report

மயில்சாமி

நடிகர் என்பதை தாண்டி நல்ல மனமுடைய ஒருவர். இதுநாள் வரை நடிகராக மட்டுமே தெரிந்த மயில்சாமி இப்போது தெய்வமாக தெரிகிறார், இறந்துவிட்டார் என்பதால் அல்ல அவர் செய்த நல்ல விஷயங்களால் மக்களுக்கு அப்படி தோன்றுகிறது.

உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு தனது நகை எல்லாம் அடமானம் வைத்து எல்லாம் உதவி செய்திருக்கிறார்.

கடவுள் நம்பிக்கை, மற்றவர்களுக்கு உதவுவது, எல்லோரிடமும் சகஜமாக பழகுவது என சிறப்பாக வாழ்ந்துள்ளார் மயில்சாமி.

மகன் மடியில் தனது உயிரைவிட்ட மயில்சாமி- கடைசி நிமிடங்கள் குறித்து கூறிய எம்.எஸ்.பாஸ்கர் | Ms Bhaskar About Mayilsamy Last Minutes

கடைசி நிமிடங்கள்

மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அனைவருமே வருத்தத்தில் இருக்க அவரது நெருங்கிய நண்பரான எம்.எஸ்.பாஸ்கர் கடும் துக்கத்தில் உள்ளார்.

ஒரு பேட்டியில் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், 3.30 மணிக்கு சிவராத்திரி பூஜை முடிந்து வீட்டிற்கு வந்திருக்கான், அப்போது பசிக்குது என கூற டிபன் கொடுத்துள்ளார்கள்.

பின் சாப்பிட்டது நெஞ்சுக்குள்ளேயே நிக்குது என கூற வெந்நீர் கொடுத்துள்ளார்கள். அதன்பிறகு நெஞ்சு வலிக்குழு என சொன்னதும் பசங்க காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

அப்போது தெரு முனை திரும்புவதற்குள் மகன் மடியிலேயே விழுந்து இறந்திருக்கிறான் என எமோஷ்னலாக பேசியுள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US