பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய முல்லை..? புதிய என்ட்ரி கொடுத்த நடிகை
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் தான் முல்லை.
இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் வி.ஜே. சித்ரா நடித்திருந்தார். சித்ராவின் மறைவிற்கு பிறகு, இந்த முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை காவ்யா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.
அவருக்கு பதிலாக அபிநயா என்பவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ளார் என்று பரவலாக பேசப்பட்டது.
ஆனால், அது உண்மையில்லையாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து காவ்யா விலகவில்லை.
மேலும், அபிநயா என்பவர் முல்லையின் தோழி கதாபாத்திரத்தில் தான் புதிதாக நடிக்க வந்துள்ளாராம்.