நடிகை நதியாவின் கணவர் மற்றும் மகள்கள்- அம்மாவும் பொண்ணும் ஒரே மாதிரி இருக்காங்களே
தமிழ் சினிமாவின் 80-களில் கனவு நாயகியாக இருந்தவர் தான் நடிகை நதியா.இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா திரைப்படத்தின் தமிழில் அறிமுகமானார்.
திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறியா நடிகை நதியா, பல வருடம் கழித்து எம்.குமரன் படத்தில் மீண்டும் நடிக்க வந்தார்.
கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய 2 மகள்கள் அடுத்தடுத்து பிறந்தனர்.
தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் நதியா தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை நதியா தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அம்மாவிம் பொண்ணும் ஒரே மாதிரி இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..