சமந்தா-நாக சைத்தன்யா விவாகரத்து குறித்து முதன்முறையாக பேசிய நாகர்ஜுனா- என்ன கூறினார் தெரியுமா?

samantha divorce nagachaitanya nagarjuna bangaraju
By Yathrika Jan 24, 2022 03:28 AM GMT
Report

நடிகை சமந்தா-நாக சைத்தன்யா இருவரும் பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார்கள். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் சோகம் அடைந்தார்கள்.

மறுபடியும் அவர்கள் இணைவார்களா என்று ஒரு சின்ன ஆசையும் ரசிகர்கள் மனதில் உள்ளது. ஆனால் அவர்கள் பிரிந்தது பிரிந்தது தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

தெலுங்கில் பங்கர் ராஜு என்ற திரைப்படம் நாக சைத்தன்யா மற்றும் நாகர்ஜுனா இருவரும் சேர்ந்து நடித்துள்ளார்கள். படமும் ரிலீஸ் ஆகி அமோக கலெக்ஷனை பெற்றுள்ளது. இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நாகர்ஜுனா பேசும்போது, விவாகரத்து விஷயத்தில் நாக சைத்தன்யா அமைதியாக இருந்ததை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

அவர் ஒரு வார்த்தை கூட எதுவும் பேசாமல் கவனமாக இருந்தார். எல்லோரையும் போலவே நானும் அவரைப் பற்றி கவலைப்பட்டேன், ஆனால் நான் அவரைப் பற்றி கவலைப்படுவதை விட அவர் என்னைப் பற்றி கவலைப்பட்டு இருந்தார் என்று கூறியிருந்தார்.  

அவர் பேசியதை கேட்ட ரசிகர்கள் தனது மகன் அமைதியாக இருந்ததாகவும், சமந்தா தான் விவாகரத்து குறித்து அதிகம் பேசி வருகிறார் என நாகர்ஜுனா மறைமுகமாக கூறியிருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US