சோபிதா வந்த நேரம்.. விசேஷம்! - மேடையிலேயே சொன்ன நாகார்ஜூனா
சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் அவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்தார் நாகார்ஜூனா.
அவர்கள் காதலை அறிவித்தத்தில் இருந்தே சமூக வலைத்தளங்களில் அதிகம் மோசமான கமெண்டுகள் தான் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன தண்டேல் படம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கிறது.
எல்லாம் சோபிதா வந்த நேரம்
தண்டேல் படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் நாக சைதன்யா தனது மகன் ஹிட் படம் கொடுத்திருப்பதை பெருமையாக பேசி இருக்கிறார். தான் வெற்றி விழாவுக்கு வந்தே நீண்ட காலம் ஆகிவிட்டது என்றும் அவர் கூறி இருக்கிறார்.
எல்லாம் சோபிதா வந்த நேரம் விசேஷம் என அவர் மேடையில் பேசி இருக்கிறார். அவர் சொன்னதை கேட்டு அரங்கத்தில் இருப்பவர்கள் கத்தி ஆரவாரம் செய்திருக்கின்றனர். வீடியோவில் நீங்களே பாருங்க.
#Sobhita Vacchinna Vela Vishesham!❤️
— 𝐁𝐡𝐞𝐞𝐬𝐡𝐦𝐚 𝐓𝐚𝐥𝐤𝐬 (@BheeshmaTalks) February 11, 2025
- #Nagarjuna at #Thandel Love Tsunami Celebrations
pic.twitter.com/wldYkBZh7z