இது முற்றிலும் முட்டாள்தனமானது ! - மீண்டும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நாகார்ஜுனா..
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக இருந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா கடந்த வருடம் தங்களின் பிரிவை அறிவித்து இருந்தனர்.
அவர்களின் பிரிவு குறித்து தொடர்ந்து பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. இதனிடையே நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா அவர்கள் பிரிவு குறித்து கருத்து தெரிவித்ததாக தகவல் பரவி வந்தது.
அதன்படி "சமந்தா தான் முதலில் விவாகரத்து குறித்து சமந்தா தான் முதலில் விவாகரத்து வேண்டுமென்று விண்ணப்பித்தார். நாக சைதன்யா சமந்தாவின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்தார்" என செய்தி பரவியது.
இதனிடையே தற்போது நாகார்ஜுனா அவரின் ட்விட்டர் பக்கத்தில் "சமந்தா - நாக சைதன்யா பிரிவு குறித்து நான் கருத்து தெரிவித்தாக சமூக வலைதங்களிலும் ஊடகங்களிலும் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் முட்டாள்தனமானது! " என பதிவிட்டுள்ளார்.
The news in social media and electronic media quoting my statement about Samantha & Nagachaitanya is completely false and absolute nonsense!!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) January 27, 2022
I request media friends to please refrain from posting rumours as news. #GiveNewsNotRumours