வாய் தவறி வந்துடுச்சு.. திரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருப்பவர் நயினார் நாகேந்திரன். முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்யை நயினார் விமர்சித்து பேசும்போது "அவர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், த்ரிஷாவை விட்டுவிட்டு வர வேண்டும்" என பேசினார்.
விஜய் - த்ரிஷா இருவரையும் இணைத்து அவர் பேசியது சர்ச்சையாக வெடித்த நிலையில் பிரபலங்கள் பலரும் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
த்ரிஷாவும் கடும் கோபமாக தனது வக்கீல் மூலமாக அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார்.

வருத்தம்
இந்நிலையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்டிருக்கிறார். வாய் தவறி அப்படி பேசிவிட்டதாக குறிப்பிட்டு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைமை மற்றும் அண்ணாமலை ஆகியோர் இது பற்றி தன்னிடம் பேசியதாக குறிப்பிட்ட அவர்..
"நான் தனிநபர் விமர்சனம் செய்தது இல்லை. அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறி இருக்கிறார்.
காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் News Lankasri
ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் - பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு! IBC Tamilnadu
சில நிமிடங்களில் 30,000 பேரைக் கொன்ற கொடிய எரிமலை... பல தசாப்த கால அமைதிக்குப் பிறகு மீண்டும் News Lankasri