தேவயானியும், நானும் பிரிய காரணமே எனது மனைவியா?.. ஓபனாக பேசிய நகுல்
தேவயானி
நடிகை தேவயானி, தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முக்கிய பிரபலம். மிகவும் குடும்ப பாங்கான கதைகளை அழகாக நடித்து தனி ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர்.
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் தேவயானி களமிறங்கி இருந்தார். இப்போது நடிகை தேவயானியின் மகள் இனியா ஜீ தமிழின் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.
நகுல் பேட்டி
தேவயானி, இயக்குனர் ராஜ்குமாரை காதலிக்க வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். பல வருடங்களாக பெற்றோர்கள் மற்றும் தம்பிகளுடன் பேசாமல் இருந்தவர் இப்போது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை தேவயானியின் சகோதரரும், நடிகருமான நகுல் தனது சகோதரி குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், ராஜகுமாரனை தேவயானி திருமணம் செய்தது நகுலுக்கு பிடிக்கவில்லை என்பதால் அக்காவை ஒதுக்கிவிட்டார் என நிறைய கமெண்ட் போடுவார்கள்.
என் மனைவி ஸ்ருதி அக்காவையும், தம்பியையும் பிரித்துவிட்டார் என்றெல்லாம் சொல்லுவதை கேட்கும் போது முதலில் கோவமாக வந்தது.
இப்போது அதை கேட்டால் என்னடா சீரியல் போல பேசுறீங்க என்று தான் சொல்லத் தோன்றுகிறது என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.