சிவகார்த்திகேயன் மீது பொறாமை.. பதிலடி கொடுத்த நடிகர் நெப்போலியன்
சிவகார்த்திகேயன்
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 31 -ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகளவில் வெளியாகவுள்ளது. தற்போது, படக்குழுவினர் மற்றும் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படம் வெளியாக ஒரு வாரமே உள்ள நிலையில் சினிமா நட்சத்திரங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் நெப்போலியன் சிவகார்த்திகேயன் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
நெப்போலியன் கருத்து
அதில், " மிகவும் கஷ்டப்பட்டு சினிமா மேல் உள்ள ஆசையால் கடினமாக உழைத்து முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். அதற்காக, அவரை பாராட்ட வேண்டும்.

மேலும், சினிமாவில் ஆரோக்கியமான போட்டியை மட்டுமே வைத்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் மீது பொறாமை படுவது அல்லது அவர் குறித்து இழிவாக பேசுவது சரியில்லை" என்று கூறியுள்ளார்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu