விபத்தில் எல்லாவற்றையும் மறந்து விஜய்யை மட்டுமே நியாபகம் வைத்திருக்கும் பிரபல நடிகரின் மகன்- யாரு தெரியுமா?
தமிழ் சினிமா மட்டும் இல்லாது இந்திய சினிமா மொழிகள் பலவற்றில் நடித்து சாதனை படைத்து வருபவர் நடிகர் நாசர். இவருக்கு பைசல், லுத்புதீன், மெஹ்திஹாசன் என 3 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகனான பைசலுக்கு கடந்த 2014ம் ஆண்டு மிகவும் பயங்கரமான விபத்தில் சிக்கினார்.
அதில் அவருடன் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பைசல் தலையில் அடிபட்டதால் தனது நினைவுகளை இழந்துள்ளார்.
ஆனால் அவரது நினைவில் இருப்பது விஜய் மட்டும் தானாம். ஆரம்பத்தில் பைசலின் நண்பர் விஜய் ஆனந்த் என்று தான் அவரது பெற்றோர்கள் நினைத்தார்களாம்.
பின்பு தான் தெரிந்ததாம் அது விஜய் என்று, இந்த விஷயம் தெரிந்த நடிகர் விஜய்யும், பைசலின் பிறந்தநாள் அன்று அவரது வீட்டிற்கு சென்று கேக் வெட்டியுள்ளார்.
அந்த புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம்.