கூட்டத்தில் சிக்கிக்கொண்டு தவித்த நயன்தாரா, கத்தி கோஷமிட்ட ரசிகர்கள் !

nayantara
By Jeeva Aug 21, 2021 08:56 AM GMT
Report

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

மேலும் சமீபத்தில் நயந்தாரா நடிப்பில் OTT தளத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அடுத்ததாக நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் நடிக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து மேலும் இரண்டு கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் இப்படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

மேலும் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவின் காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார்.

அதற்காக அவர் செல்லும் போது திடீரென ரசிகர்கள் கூட்டம் அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் கத்தி கோஷமிட்டு நயன்தாராவின் காரை சூழ்ந்து கொண்டனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US